
‘’புனித வெள்ளிக்கு வாழ்த்து தெரிவித்த கரூர் எம்.பி. ஜோதிமணி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு போஸ்டர் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’புனித வெள்ளித் திருநாளில், வாழ்வின் ஒளி நமது பாதையை வழிநடத்தட்டும், அன்பு நமது இதயத்தை நிரப்பட்டும!! செ.ஜோதிமணி. கரூர் நாடாளுமன்ற உறுப்பினர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது ஜோதிமணி பெயரில் பகிரப்படும் போலியான போஸ்டர் என்றும், அவர் இவ்வாறு எதுவும் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் தெரியவந்தது. அவரது அதிகாரப்பூர்வ X வலைதள பக்கத்திலும் இதுபற்றி எந்த பதிவும் காணப்படவில்லை.
கூடுதல் ஆதாரத்திற்காக, ஜோதிமணி தரப்பிலும் நாம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல், ஜோதிமணி பெயரில் பகிரப்படும் போலியான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:கரூர் எம்.பி. ஜோதிமணி புனித வெள்ளிக்கு வாழ்த்து தெரிவித்தாரா?
Written By: Pankaj IyerResult: False
