
கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அ.தி.மு.க 10 ஆண்டுகளில் செய்யாததை, 10 மாதங்களில் செய்துள்ளோம் என மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சாணக்யா என்ற யூடியூப் சேனல் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின். அதிமுக 10 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 10 மாதங்களில் செய்துள்ளோம். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி இன்னும் பல..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Ravi RS என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஏப்ரல் 20ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தி.மு.க ஆட்சியில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துவிட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே பெருமையுடன் கூறியது போன்று நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர். பிரபல செய்தியாளர் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா ஊடகத்தின் லோகோவுடன் நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர். எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் 19-04-2022 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, குறிப்பிட்ட தினத்தில் சாணக்யா வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்தபோது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டை சாணக்யா வெளியிட்டிருப்பது தெரிந்தது. ஆனால் அதில், “சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்: அதிமுக 10 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 10 மாதங்களில் செய்துள்ளோம் – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்” என்று மட்டுமே இருந்தது. இதில் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் என்று இருந்ததை நீக்கிவிட்டு, விஷமத்தனமாக கொலை, கொள்ளையில் என்று சேர்த்திருப்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook
இது தொடர்பாக சாணக்யா ஊடகத்தைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவர்களும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்தனர். இதன் அடிப்படையில், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிபறி இன்னும் பலவற்றில் அ.தி.மு.க 10 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 10 மாதங்களில் செய்துள்ளோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றத்தில் தி.மு.க அரசு சாதனை புரிந்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:10 மாதங்களில் செய்த சாதனை என மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் விஷம நியூஸ் கார்டு!
Fact Check By: Chendur PandianResult: False
