‘சந்திராயன் 3 வெற்றி பெற வெங்கடாசலபதி அருளே காரணம்,’ என்று நாராயணன் திருப்பதி கூறினாரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’ சந்திராயன் 3 வெற்றி பெற வெங்கடாசலபதி அருளே காரணம்,’’ என்று நாராயணன் திருப்பதி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

Facebook Claim Link l Archived Link 

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று விவரம் தேடினோம். ஆனால், இவ்வாறு எந்த செய்தியும் தினமலர் ஊடகத்தின் சமூக வலைதள பக்கங்களில் காணவில்லை. இதைத்தொடர்ந்து, அவர்களது ஆசிரியர்கள் குழுவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். ‘’இதனை நாங்கள் வெளியிடவில்லை,’’ என்று மறுப்பு தெரிவித்தனர். 

அடுத்தப்படியாக, நாம் இதன்பேரில் தொடர்ந்து தகவல் தேடியபோது, இதுபற்றி நாராயணன் திருப்பதி மறுப்பு தெரிவித்து, ட்வீட் ஒன்று வெளியிட்டிருப்பதைக் கண்டோம். 

அதனைக் கீழே இணைத்துள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title: ‘சந்திராயன் 3 வெற்றி பெற வெங்கடாசலபதி அருளே காரணம்,’ என்று நாராயணன் திருப்பதி கூறினாரா?

Written By: Fact Crescendo Team 

Result: False