கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி ரஃபீக் உசேன் பாதுக் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘’கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி ரஃபீக் உசேன் பாதுக்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ இவன் ரஃபீக் உசேன் பாதுக்,

கோத்ராவில் இரண்டு பெட்ரோல் பம்புகளின் உரிமையாளரும் ஒரு துலுக்க இயக்க தலைவருமானவன்… 23 வருடங்களுக்கு முன்பாக குஜராத் கோத்ரா ரயில் நிலையத்தில் ரயிலை எரிக்க இலவசமாக பெட்ரோல் கொடுத்த 

இந்த ஜிஹாதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பிறகு 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தான்…

இவனை குஜராத் உளவுப் பிரிவு போலீசார் தேடிக் கொண்டிருந்தனர். 

இறுதியாக டெல்லியில் அவரது மறைவிடத்தை போலீசார் கண்டுபிடித்து 

அவனை சிறையில் அடைந்தானர்… நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது..

கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸில் ஏற்பட்ட தீ விபத்து தன்னிச்சையானது என்றும், யாராலும் வேண்டுமென்றே எரிக்கப்படவில்லை என்றும் லாலு யாதவ் உட்பட திமுக, துலுக்க ரெட் லைட் பயல்கள் ,காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் எல்லாம்  கூறியது நினைவிருக்கிறதா? 

இந்த உண்மைகள் அனைத்தும் நீதிமன்றத்தில் வெளிச்சத்துக்கு வந்தன… தமிழக ரெட் லைட் ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிடவில்லை. இந்த உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம் ” என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட புகைப்படத்தில் உள்ள நபர் யார் என்று தகவல் தேடினோம். அப்போது, இவர் Godhra Train Burning வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராகி, வாதாடிய RC Kodekar என்று தெரியவந்தது. மேலும், அவரது புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்தி, சிலர் சமூக வலைதளங்களில் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கின் குற்றவாளி ரஃபிக் உசேன் பாதுக் என்று வதந்தி பரப்புகிறார்கள். இதுபற்றி கடந்த 2024ம் ஆண்டு RC Kodekar போலீஸ் புகார் அளித்துள்ளார். 

கடந்த 2024ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு பெட்ரோல் கொடுத்து உதவியதாகக் குற்றம்சாட்டப்படுபவர் Rafiq Hussain Bhatuk. இவர், 19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நிலையில், 2021ம் ஆண்டு போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து, அவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்த நீதிமன்றம், கடந்த 2022ம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 

Bussiness Standard l Economic Times l Hindustan Times 

இதுதொடர்பாக, அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் RC Kodekar என்பவரிடம் பேட்டி எடுத்து, ANI ஊடகம் 2022ம் ஆண்டு செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. 

ஆனால், அந்த செய்தியின் தலைப்பு மற்றும் அதில் இணைக்கப்பட்டிருந்த புகைப்படம் இரண்டையும் தவறாகப் புரிந்துகொண்ட சிலர், வழக்கறிஞர் RC Kodekar புகைப்படத்தை எடுத்து, குறிப்பிட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி பாதுக் என்று வதந்தி பரப்ப தொடங்கினர். 

இதையடுத்து, RC Kodekar போலீசில் புகார் செய்தார். அதேசமயம், 2022ம் ஆண்டு வெளியிட்ட செய்தியால் ஏற்பட்ட குழப்பம் பற்றி, 2024ம் ஆண்டு ANI ஊடகம் விளக்கம் அளித்தது. 

இத்தகைய சூழலில், மீண்டும் இதே வதந்தியை உண்மை தெரியாமல் சிலர் தமிழ்மொழியில் பரப்புவதாக, தெளிவாகிறது. 

உண்மையான Rafiq Hussain Bhatuk புகைப்படத்துடன், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் இருப்பவர் ‘ரஃபீக் உசேன் பாதுக்’ கிடையாது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி ரஃபீக் உசேன் பாதுக் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

Leave a Reply