
நடிகை கிருத்தி ஷெட்டி கையில் மோடியை ஆதரித்தும், மு.க.ஸ்டாலினை விமர்சித்தும் பதாகை உள்ளது போன்று, ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். ஃபேஸ்புக்கிலும் பலர் இதனை பகிர்வதைக் கண்டோம்.
Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
திருக்குறளை டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்து திமுக அரசு நீக்கியதாகக் கூறப்படுவது பகுதியளவு உண்மை. அதாவது, திருக்குறள் நீக்கப்பட்ட நிலையில், பிறகு தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்பை தொடர்ந்து உடனடியாக, திருக்குறள் மீண்டும் சேர்க்கப்பட்டதாக, டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது. இதுபற்றி நாமும் ஏற்கனவே ஆய்வு செய்து, அதன் நம்பகத்தன்மை பற்றி செய்தி வெளியிட்டுள்ளோம்.
இந்த பின்னணியில்தான் மேற்கண்ட புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். Uppena என்ற தெலுங்குப் படம் மூலமாக அறிமுகமாகி, பரவலான கவனம் ஈர்த்தவர் நடிகை கிருத்தி ஷெட்டி. அந்த படத்தின் வெற்றி விழாவில் அவர் பங்கேற்றபோது எடுத்த புகைப்படத்தை எடுத்து, மு.க.ஸ்டாலின் பற்றியும், மோடி பற்றியும் அவர் பதாகை கையில் ஏந்தியது போல எடிட் செய்து, பரப்பியுள்ளனர்.
Krithi Shetty at Uppena Success Meet
விமர்சிப்பது அவரவர் உரிமை என்றாலும், இந்த படத்தை எடிட் செய்து பகிர்வதால், அந்த நடிகையே இவ்வாறு பதாகையை எழுதி கையில் ஏந்தி பிடித்திருப்பாரோ என்ற குழப்பத்தில் சமூக வலைதள பயனாளர்கள் உள்ளனர். அதன் அடிப்படையிலேயே நாமும் இந்த ஆய்வை நடத்தி, தவறான புகைப்படம் என உறுதி செய்துள்ளோம்.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:நடிகை கிருத்தி ஷெட்டி கையில் மோடி, ஸ்டாலின் பற்றி பதாகை?- எடிட் செய்த புகைப்படத்தால் குழப்பம்!
Fact Check By: Pankaj IyerResult: Altered
