
‘’ புதிய பாராளுமன்றத்தில் வைப்பதற்காக, ஆதீனம் வழங்கிய செங்கோலை விட அம்மா எம்ஜிஆருக்கு வழங்கிய செங்கோலே பெரிது,’’ என்று ஜெயக்குமார் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
புதிய தலைமுறை லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த கட்டிடத்தில், செங்கோல் ஒன்றை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவாவடுவதுறை ஆதீனம் தலைமையில் கடந்த 1947ம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு செங்கோல் ஒன்று பரிசளிக்கப்பட்டது. அந்த செங்கோல் பின்னர் அலகாபாத்தில் உள்ள மியூசியம் ஒன்றில் பார்வைக்கு வைக்கப்பட்டது.
ஆனால், தற்போது இந்த செங்கோலை மீட்டெடுத்து, புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒரு சாரார் ஆதரவும், சிலர் கடும் விமர்சனமும் முன்வைத்து வருகின்றனர்.
thehindu link
இந்த சூழலில்தான், ‘‘மேற்கண்ட செங்கோல் ஒன்றும் பெரிதல்ல. இதைவிட பெரிய செங்கோலை அம்மா (ஜெயலலிதா) ஏற்கனவே எம்ஜிஆருக்கு வழங்கிவிட்டார். ஆனால், இதுபற்றி அதிமுக.,வினர் ஒன்றும் அல்பத்தனமாக பாஜக போல விளம்பரம் செய்யவில்லை,’’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாகச் சிலர் தகவல் பரப்புகின்றனர்.
ஆனால், இதனை புதிய தலைமுறை வெளியிடவில்லை. இதுபற்றி அவர்களே அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title: ஆதீனம் வழங்கிய செங்கோலை விட அம்மா எம்ஜிஆருக்கு வழங்கியதே பெரிது என்று ஜெயக்குமார் சொன்னாரா?
Written By: Fact Crescendo TeamResult: False
