
‘’குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை விட எனக்கு தகுதிகள் அதிகமுண்டு’’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
Facebook Claim Link l Archived Link
தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த செய்தியை உண்மை என நம்பி பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
புதிய பாராளுமன்ற கட்டிடம், பிரதமர் அலுவலகம், துணைக் குடியரசுத் தலைவர் அலுவலகம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே இடத்தில் அமைத்து, மத்திய அரசின் நிர்வாகப் பணிகள் அனைத்தும் ஒரே வளாகத்தில் செயல்படும் வகையில் Central Vista Redevelopment Project மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது, இந்த வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
அதேசமயம், இந்நிகழ்வுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த சூழலில், மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கக்கூடாது என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவியது. நாம் இதுபற்றி ஃபேக்ட்செக் செய்து கட்டுரை வெளியிட்டுள்ளோம்.
Fact Crescendo Tamil Link
இந்த வரிசையில் அடுத்தக்கட்டமாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக, மேற்கண்ட வகையில் செய்தி பரவுகிறது. ஆனால், இது உண்மையல்ல.
‘’இவ்வாறு நாங்கள் எந்த செய்தியும் வெளியிடவில்லை. இது எங்களது பெயரில் பரவும் வதந்தி,’’ என்று தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகி நமக்கு உறுதி செய்தார்.
மேலும், தந்தி டிவி வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
நாம் ஆய்வு செய்யும் நியூஸ் கார்டையும், தந்தி டிவி வெளியிட்ட உண்மையான கார்டையும் ஒப்பீடு செய்து கீழே இணைத்துள்ளோம்.
இதுதவிர, புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா தொடர்பாக, சென்னையில் நிர்மலா சீதாராமன் நடத்திய செய்தியாளர் சந்திப்பு பற்றிய முழு வீடியோ லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. அதில் அவர் எங்கேயும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பற்றி இழிவுபடுத்தும் வகையில் பேசவில்லை.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட செய்தி போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:‘திரௌபதி முர்முவை விட எனக்கு தகுதிகள் அதிகமுண்டு’ என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?
Written By: Fact Crescendo TeamResult: Altered
