தரையில் படுத்து மோடியை புகைப்படம் எடுத்த நபர் என்று பரவும் படம் உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

பிரதமர் மோடி நடந்து செல்கையில், வருக்கு பக்கவாட்டில் புகைப்பட கலைஞர் ஒருவர் படுத்திருந்து புகைப்படம் எடுப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

புகைப்பட கலைஞர் ஒருவர் தரையில் படுத்து மோடியை புகைப்படம் எடுப்பது போன்ற படத்தை பயன்படுத்தி புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மாப்பிள்ளை, இந்த கேமரா மேன் படுகிற பாட்டை பார்த்தால் பாவமா இருக்குடா, 2024 லாவது இவருக்கு ஓய்வு கிடைக்க ஏதாவது பண்ணனும்னுடா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Thomas Jeyaseelan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 நவம்பர் 3ம் தேதி வெளியிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரதமர் மோடியை விதவிதமாக புகைப்படம் எடுக்க வற்புறுத்தப்படும் புகைப்படக் கலைஞர் என்று நையாண்டிப் பதிவு போல புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அந்த கருத்துக்குள் செல்லவில்லை. மோடி முன்னிலையில் புகைப்பட கலைஞர் படுத்தபடி புகைப்படம் எடுக்கும் படம் உண்மையா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, நரேந்திர மோடி மட்டும் நடந்து செல்லும் வகையில் வெளியான உண்மையான புகைப்படம் நமக்குக் கிடைத்தது. கடந்த ஓராண்டாக இந்த புகைப்படத்தைப் பல ஊடகங்கள், சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதும் தெரிந்தது.

Archive

இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று தொடர்ந்து தேடினோம். அப்போது, பிரதமர் மோடியே இந்த புகக்பபடத்தை 2021ம் ஆண்டு காந்தி நினைவு தினத்தன்று, காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த போது வெளியிட்டிருந்தது தெரிந்தது. பிரதமர் மோடி 2021ம் ஆண்டில் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய படத்தை எடுத்து, எடிட் செய்து தவறாகப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பிரதமர் மோடி முன்பு போட்டோகிராஃபர் படுத்துக் கிடக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தரையில் படுத்து மோடியை புகைப்படம் எடுத்த நபர் என்று பரவும் படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False