
ஸ்ரீநகரில் தீவிரவாதியை சுற்றி வளைத்துக் கைது செய்த போலீசார், என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

தீவிரவாதியை சுற்றி வளைத்து ஸ்ரீநகரில் தைரியமாக பிடித்த போலீஸ் எனக் கூறி இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்கின்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவில் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, அதனை ரிவர்ஸ் இமேஜ் முறையில் தேடினோம். அப்போது, இது பிரேசிலில் நிகழ்ந்தது என்பதற்கான ஆதாரம் கிடைத்தது.
இதன்படி, பிரேசில் நாட்டில் உள்ள perola பகுதியில், போலீஸ் தடுப்பை மீறி, 17 வயது சிறுவன் ஒருவன் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றுள்ளான். அவனை நிறுத்தும்படி போலீசார் எச்சரித்தும், அவன் நிறுத்தாமல் செல்லவே, உடனடியாக, அவனை சுற்றி வளைத்து, தாக்கி போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதம், முதல் வாரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பான மேலும் சில செய்தி லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சில வீடியோக்களில் ஆகஸ்ட் 2, 2021 என்றும், சில செய்திகளில் ஆகஸ்ட் 03, 2021 என்றும் இந்த சம்பவம் நிகழ்ந்த தேதியை குறிப்பிட்டுள்ளனர்.

Ndmais.com Link I Archived Link
எனவே, பிரேசில் நாட்டில் நிகழ்ந்த சம்பவத்தின் வீடியோவை எடுத்து, இந்தியாவுடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்புகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:ஸ்ரீநகரில் தீவிரவாதியை போலீஸ் கைது செய்த வீடியோ- உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: False
