‘’சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் மில்லர் அறிவிப்பு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ டேவிட் மில்லர் ஓய்வு.’’, என்று எழுதப்பட்டுள்ளது.

தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளிலும் இந்த செய்தி பகிரப்படுவதைக் கண்டோம்.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கடந்த ஜூன் 29, 2024 அன்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

இறுதிப் போட்டியில் தென்னாப்ரிக்கா தோல்வியடைந்த காரணத்தால், ‘அந்நாட்டு கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்’, என்று கூறி மேற்கண்ட வகையில் சமூக வலைதளங்களில் பலரும் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், டேவிட் மில்லர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுபற்றிய மேலும் சில செய்தி ஆதாரங்கள் இதோ…

Fact Crescendo Srilanka Link l Hindustan Times Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் மில்லர் அறிவித்தாரா?

Written By: Fact Crescendo Team

Result: False