‘ஒரே நாளில் எட்டு குழந்தைகளை கடத்திய நபர்’ என்று பரவும் வதந்தியால் பரபரப்பு…

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’தமிழ்நாட்டில் ஒரே நாளில் எட்டு குழந்தைகளை கடத்திய நபர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ இவன் ஒரு குழந்தைக் கடத்தல் காரன்… சென்னையில் இதுவரை 7 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையை கடத்தியதாக தகவல் வந்துள்ளது… பெற்றோர் கூட இருக்கும் போதே கடத்துவதாகவும், குழந்தைகளிடம் பேச்சு கொடுத்து நைசாக பேசி கடத்தி போவதாகவும் சொல்கிறார்கள்… எந்தளவு உண்மை என்று தெரியவில்லை… இருந்தாலும் எச்சரிக்கையாக இருங்கள்……..’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

கடந்த சில நாட்களாக, சமூக வலைதளங்களில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக, பல்வேறு பதிவுகள் பகிரப்படுகின்றன. இதில் ஒன்றுதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலும். பார்ப்பதற்கு, குழந்தைகள் மீதான அக்கறையில் பகிரப்பட்ட தகவலாக இருந்தாலும், இது பொதுமக்களிடையே தேவையற்ற பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது என்பதே உண்மை. 

ஆம், இந்த வதந்தியை பரப்பிய நபர்களை ஏற்கனவே திண்டுக்கல் போலீசார் கைது செய்துள்ளனர். 

மேலும், திண்டுக்கல் போலீஸ் தரப்பில் இத்தகைய வதந்தி பரப்பினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று, சென்னையிலும் வதந்தி பரப்பிய ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினத்திலும் சிலர் கைதாகியுள்ளனர். 

News 18 Tamil Link 

இது மட்டுமின்றி, மாவட்டந்தோறும் குழந்தைகள் கடத்தல் வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். 

முதலில், சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் வாட்ஸ்ஆப் மூலமாகப் பரவிய இந்த வதந்தி படிப்படியாக தற்போது தமிழ்நாடு முழுக்க மக்களை பீதியடையச் செய்துள்ளது. 

இதுபற்றி அந்தந்த மாவட்ட போலீசாரும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர். 

Puthiyathalaimurai Link 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் ஒரு வதந்தி என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

இத்தகைய அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்புவோர் கைது செய்யப்பட நேரிடும் என்பதால், நமது வாசகர்கள் எந்த தகவலாக இருந்தாலும் அவற்றின் நம்பகத்தன்மையை சரிபார்த்த பிறகு, மற்றவர்களுக்கு ஷேர் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.  

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:‘ஒரே நாளில் எட்டு குழந்தைகளை கடத்திய நபர்’ என்று பரவும் வதந்தியால் பரபரப்பு…

Fact Check By: Fact Crescendo Team 

Result: False