
நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலை 13 நாட்களாகக் காணவில்லை, என்று குறிப்பிட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகப் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

மேலும், இதனை சமூக வலைதளங்களில் பலர் விமர்சிப்பதையும், கேலி, கிண்டல் செய்வதையும் காண முடிகிறது.

Facebook Claim Link l Archived Link
உண்மை அறிவோம்:
சில நாட்கள் முன்பாக, நாக்பூரில் இருந்து ஏற்றுமதிப் பொருட்களை 90 கண்டெய்னர் பெட்டிகளில் ஏற்றிக் கொண்டு, மும்பை நோக்கி புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்றை காணவில்லை என்று ஊடகங்களில் பரபரப்பாகச் செய்தி வெளியிடப்பட்டது. இதனை முதன்முதலாக, பன்வாரிலால் புரோஹித் நடத்தும் The Hitavada என்ற ஊடகம்தான் வெளியிட்டது.

எனவே, இது உண்மையாக இருக்கும் என நம்பி, இந்தியா முழுக்க பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட தொடங்கின.
Apnlive link l nagpurtoday link
இந்நிலையில், இதுபற்றி ரயில்வே நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ரயில் காணாமல் போகவில்லை; அதில் இருந்த சரக்கு அனைத்தும் முறைப்படி மும்பையை அடைந்துவிட்டன, என்றும் கூறப்பட்டுள்ளது. தவிர, இந்த விவகாரத்தில், The Hitavada ஊடகம் எதன் அடிப்படையில் செய்தி வெளியிட்டது என்று விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றும், ரயில்வே நிர்வாகம் இதுவரை உரிய ஆதாரத்தை வெளியிடவில்லை, வாய் வார்த்தையாகப் பேசி வருகிறது என்றும் குறிப்பிட்டு அந்த ஊடகம் மற்றொரு செய்தியை வெளியிட்டிருக்கிறது.
எனவே, இந்த விவகாரம், ரயில்வே நிர்வாகத்திற்கும் குறிப்பிட்ட ஊடகத்திற்கும் இடைப்பட்ட மோதலாக மாறியுள்ளது. அதேசமயம், ரயில்வே நிர்வாகம் உரிய விளக்கம் அளித்த பிறகும் மேற்கண்ட செய்தியை பலர் சமூக வலைதளங்களில் பகிர்வது ஏற்புடையதல்ல என்று குறிப்பிட விரும்புகிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:நாக்பூரில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில் மாயமா? ஊடகங்கள் வெளியிட்ட செய்தியும், ரயில்வே அளித்த விளக்கமும்…
By: Fact Crescendo TeamResult: EXPLAINER
