
‘’ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, இந்தி மட்டும் பின்பற்றப்படுகிறது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்படுகிறது. இதன நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்ல எங்கய்யா தமிழ்? எடப்பாடி அதையும் அடகு வைத்து சாப்பிட்டுட்டு வெற்றி நடை பொடும் தமிழகமேன்னு அவரே பாடிட்டு போறாரா?,’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவின் கீழேயே பலரும் கமெண்ட் பகிர்ந்துள்ளனர். ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தின் ஒரு பகுதி புகைப்படத்தை மட்டும் எடுத்து, இவ்வாறு தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று அந்த கமெண்ட்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனாலும், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவர் அதனை எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே தவறான தகவலையே வைத்திருக்கிறார்.

எனவே, ரயில் நிலையத்தின் முழு புகைப்படத்தை பகிராமல், ஒரு பகுதியை பகிர்ந்துவிட்டு, தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, தவறான தகவல் பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

இதுதவிர, ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழ் புறக்கணிப்பு என்று கூறி சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட புகைப்படம் பரவி வருவதால், இதுபற்றி தென்னக ரயில்வே சார்பாக, அதன் தலைமை பிஆர்ஓ விளக்கம் அளித்திருக்கிறார்.
அதாவது, இந்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டம் 1963ன் படி, இந்தி, ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழி ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மாநிலங்களில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படியே, ஈரோடு ரயில் நிலையம் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க இயங்கும் அனைத்து ரயில் நிலையங்களிலும் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் பெயர்ப்பலகைகள், அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

எனவே, ஈரோடு ரயில் நிலையத்தின் ஒரு பகுதி புகைப்படத்தை மட்டும் வைத்துக் கொண்டு தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர் என்று தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழ் புறக்கணிப்பு; இந்தி மொழிக்கு முன்னுரிமையா?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
