திருப்பூர் – கரூர் எல்லையில் வெள்ளக்கோவில் அருகே சிறுத்தை நடமாட்டமா?

உலகச் செய்திகள் | World News சமூக ஊடகம் | Social

வெள்ளக்கோவில் அருகே குறுக்கத்தி என்ற ஊரில் சிறுத்தை நடமாட்டம் என சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்: 

Facebook Claim Link l Archived Link 

இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

பலரும் இந்த பதிவை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வெள்ளக்கோவில் அருகே குறுக்கத்தி என்ற ஊர் அமைந்துள்ளது உண்மைதான். இது, திருப்பூர் கரூர் மாவட்டங்களின் நடுவே, எல்லைப்பகுதியில் உள்ளது. வனங்கள் நிறைந்த இந்த பகுதியில் சிறுத்தை நடமாடுவதாகவும், கால்நடைகள் மட்டுமின்றி மனிதர்களைக் கூட அடித்துக் கொன்றுள்ளதாகவும் சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சமூட்டும் வகையில் மேற்கண்ட தகவல் பகிரப்படுகிறது. 

ஆனால், இது தவறான தகவல். குறிப்பிட்ட பகுதி, காங்கேயம் தாலுகா எல்லைக்குட்பட்டதாகும். அந்த பகுதி போலீசாரை முதலில் தொடர்பு கொண்டு (04257-260522) விளக்கம் கேட்டோம். 

‘’ சிறுத்தை நடமாட்டம் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. சிலர் ஆங்காங்கே பார்த்ததாகக் கூறினாலும், அதில் நம்பகத்தன்மை இல்லை. இதுபற்றி விசாரித்து வருகிறோம். ஆனால், அதற்குள்ளாகவே, கால்நடைகளை அடித்துவிட்டதாகக் கூறுவதோடு, மனிதர்களையும் சிறுத்தை கொன்றுவிட்டதாக, வதந்தி பரப்புகிறார்கள். இது மிகவும் தவறு. சாமானிய மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த புகைப்படங்களில் மனித சடலம் உள்ளதுபோன்ற படம் இங்கே எடுக்கப்பட்டதல்ல. மேலும், ஆட்டின் உடல் உறுப்புகள் இடம்பெற்றுள்ள படங்கள் பற்றி விசாரணை நடைபெறுகிறது. உறுதிப்படுத்தப்படாத இதுபோன்ற தகவலை யாரும் பகிராமல் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்,’’ என்றனர். 

Nasser Waziri என்ற நபர், மனித சடலம் இருக்கும் மேற்கண்ட படம் ஒன்றை ஏற்கனவே ட்விட்டரில் ஜனவரி 2023ல் பகிர்ந்திருக்கிறார். அந்த படத்தையே எடுத்து, புதியதுபோல, தற்போது பகிர்கின்றனர். 

காங்கேயம் பகுதி வனத்துறையினரும் இதையே கூறினர். ‘’இதுகுறித்து ஊடகங்களிலும் ஏற்கனவே செய்தி வெளியிட்டும், சிலர் தொடர்ந்து இப்படியான வதந்தி பரப்புகிறார்கள்,’’ என்றும் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். 

கூடுதல் ஆதாரத்திற்காக ஊடகச் செய்தி ஒன்றையும் கீழே இணைத்துள்ளோம்.

Dinamani Link 

எனவே, உறுதிப்படுத்தாத ஒரு செய்தியை உண்மை என நம்பி பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:திருப்பூர் – கரூர் எல்லையில் வெள்ளக்கோவில் அருகே சிறுத்தை நடமாட்டமா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: Misleading