போப் ஆண்டவர் விலங்குகளுக்கு ஞானஸ்நானம் வழங்குவதாகப் பரவும் வதந்தி…

அரசியல் | Politics உலகச் செய்திகள் | World News சமூக ஊடகம் | Social

‘’போப் ஆண்டவர் விலங்குகளுக்கு ஞானஸ்நானம் வழங்குகிறார்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  

இதில், ‘’ “`ரோமாபுரி யில்,இருக்கும் கத்தோலிக்க திருச்சபை தலைவரும், போப்பாண்டவருமான ஜான்பால்; நாய்க்கு ராபோஜனம் கொடுக்கிறார்“`. 

நாயை பரலோகத்திற்கு அனுப்பபோறாங்களா? 

*தேவன்* “`நாய்க்காகவா (மிருகங்களுக்காகவா) மரித்து இரத்தம் சிந்தினார். 

வேத அறிவு இல்லாத இவர் பின்னால் கோடிக்கணக்கான ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தோ பரிதாபம்,,,,,,,

ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன். 

1 பேதுரு 4;11

😈👹“`😈👹😈👹😈👹😈👹😈👹,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Archived Link 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் தொடர்பாக, நாம் விவரம் தேடினோம். அப்போது, இதுபோன்று எந்த செய்தியும் சமீபத்தில் வெளியாகவில்லை, என்று தெரியவந்தது. 

அடுத்தப்படியாக, ரோமாபுரியில், இருக்கும் கத்தோலிக்க திருச்சபை தலைவரும், போப்பாண்டவருமான ஜான்பால் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், தற்போது போப் பிரான்சிஸ் என்பவரே பதவியில் உள்ளார். ஜான்பால் கடந்த 2005ம் ஆண்டே உயிரிழந்துவிட்டார். 

தொடர்ந்து, நாம் விவரம் தேடியபோது, மேற்கண்ட பதிவில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒவ்வொன்றும் தொடர்பில்லாதவை, என தெரியவந்தது. 

உண்மையான புகைப்படத்தில் போப் பிரான்சிஸ் ஒரு சிறுவனுக்கு, அப்பம் வழங்குவதைக் காண முடிகிறது. இதனையே எடிட் செய்து, நாய்க்கு ஞானஸ்நானம் செய்ததாக, வதந்தி பரப்புகின்றனர். 

religion.orf.at l usatoday 

உண்மையான புகைப்படத்தையும், போலியான புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:போப் ஆண்டவர் விலங்குகளுக்கு ஞானஸ்நானம் வழங்குவதாகப் பரவும் வதந்தி…

Written By: Fact Crescendo Team 

Result: Altered