தோசைக்கு பணம் கொடுக்காமல் சென்ற பாஜக-வினர் என்று பகிரப்படும் போலியான நியூஸ்கார்டு!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

பிரசாரத்துக்கு சென்ற போது, தோசைக்கு பணம் கொடுக்காமல் சென்ற பாஜக-வினர் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அண்ணாமலை தோசை சுடும் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், தோசைக்கு பணம் கொடுக்காமல் சென்ற பாஜகவினர்! தோசை கடைசியில் தோசை சுட்டு பிரச்சாரம் செய்த அண்ணாமலை. அதற்கு பின் பாஜக தொண்டர்கள் பலர் அந்த கடையில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்று விட்டதாக ஓட்டல் உரிமையாளர் புகார் செய்துள்ளார்” என்று இருந்தது. 

இந்த நியூஸ் கார்டை, Troll Sanghi’s என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 பிப்ரவரி 12ம் தேதி பதிவிட்டுள்ளது. இந்த நியூஸ் கார்டை பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தல் பிரசாரத்தின் போது ஹோட்டல் ஒன்றில் தோசை சுட்டு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார். இந்த புகைப்படங்களை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை வைத்து புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஆனால், அதில் உள்ள ஃபாண்ட் மற்றும் பின்னணி டிசைன் வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. மேலும், நியூஸ் கார்டில் உள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு குறித்து ஆய்வு செய்தோம்.

Archive

முதலில் புதிய தலைமுறை இந்த நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று பார்வையிட்டோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் பிப்ரவரி 11ம் தேதி வெளியானது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே, பிப்ரவரி 11, 2022 அன்று புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பார்வையிட்டோம். அதில், அண்ணாமலை தோசை சுட்டது தொடர்பாக எந்த நியூஸ் கார்டும் இல்லை.

எனவே, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் ராசுஸைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தார். இதன் அடிப்படையில் தோசைக்கு பணம் கொடுக்காமல் சென்ற பாஜகவினர் என்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தோசை சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்ற பாஜக-வினர் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தோசைக்கு பணம் கொடுக்காமல் சென்ற பாஜக-வினர் என்று பகிரப்படும் போலியான நியூஸ்கார்டு!

Fact Check By: Chendur Pandian 

Result: False