
‘‘திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்கள் ஆடு, கோழி பலி கொடுத்து நேர்ச்சை நிறைவேற்றலாம்,’’ என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’வாக்குறுதி!!! திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமிய பெருமக்கள் தொழுகை செய்து ஆடு, கோழி பலியிட்டு, நேர்ச்சை நிறைவேற்று விதமாக புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்படும்- மு.க.ஸ்டாலின்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது போலியானது, என்று தெரியவந்தது.
இதுதொடர்பாக, சன் நியூஸ் ஆசிரியர் குழு மற்றும் திமுக ஐடி பிரிவு ஆகியோரிடம் பேசி, இது உண்மையல்ல, என்று உறுதிப்படுத்தியுள்ளோம்.
மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கை மார்ச் 29 அன்றுதான் வெளியாக உள்ளது. இத்தகைய சூழலில் தவறான தகவல் பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு, உண்மையானதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


