
அம்மா உணவகங்களுக்கு தேவையான சமையல் எண்ணெயை இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும் என்று அண்ணாமலை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார்.
இதேபோல, ஃபேஸ்புக்கிலும் இதனை சிலர் உண்மை போல குறிப்பிட்டு, பகிர்வதைக் கண்டோம்.
Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
சமூக வலைதளங்களில் சமீப நாட்களாக, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும், அவரை பலர் விமர்சிப்பதும் வழக்கமாக உள்ளது. திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாக, அண்ணாமலை பேசிவிட்டு, பின்னர் மன்னிப்பு கேட்டதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
Vikatan News Link I Puthiyathalaimurai News Link
இப்படி அவ்வப்போது அவர் சில இடங்களில் உளறுவதால், அவரது பெயரில் பரவும் போலிச் செய்திகள் கூட சில நேரம் உண்மை போலவே தோன்றுகின்றன. அப்படி நினைத்தே பலர் போலிச் செய்திகளை உண்மை போல பகிரவும் செய்கின்றனர்.
அந்த வகையில் பகிரப்படும் ஒரு வதந்திதான் மேலே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தியும். உண்மையில், அண்ணாமலை இப்படி எங்கேயும் பேசவில்லை. அண்ணாமலையின் ட்விட்டர் பக்கங்களில் இதுபோன்ற பதிவு எதுவும் காணப்படவில்லை. அதேபோல, ஊடகங்களிலும் இப்படியான செய்தி வெளியாகவில்லை. கூடுதல் ஆதாரத்திற்காக, இதுகுறித்து நாம் பாஜக ஐடி பிரிவு தரப்பில் விசாரித்து, உறுதிப்படுத்தியுள்ளோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து அம்மா உணவகங்களுக்கு சமையல் எண்ணெய் வாங்கும்படி அண்ணாமலை கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
