‘’உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரோஹிங்கியா முஸ்லிம்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ ரோஹிங்கியாக்கள் அல்லது ரவுடிகள்.?

உ.பி., மாநிலம் மதுராவில் வசிக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் அடையாள அட்டைகளை சரிபார்க்க உ.பி போலீசார் சென்றனர்.

இந்த சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் ஒத்துழைப்பதற்குப் பதிலாக காவல்துறையுடன் சண்டையிடத் தொடங்கினர்.

ரோஹிங்கியாக்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து நாடு கடத்துங்கள்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட பதிவில் கூறியுள்ளது போன்று, உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக, எந்த செய்தியும் நமக்கு, காண கிடைக்கவில்லை.

அடுத்தப்படியாக, ரிவஸ் இமேஜ் முறையில் கூகுள் உதவியுடன் தகவல் தேடியபோது, இது சில வாரம் முன்பாக, அசாம் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் என்று தெரியவந்தது.

India Today NE Link

இதுதொடர்பாக, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் Pijush Hazarika கண்டனம் தெரிவித்ததையும் கண்டோம்.

அடுத்து, மதுரா போலீசார் இதுபற்றி மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், நமக்கு விவரம் கிடைத்தது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

எனவே, அசாம் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான வீடியோவை எடுத்து, உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டு, தவறான தகவல் பரப்பியுள்ளதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

குறித்த வதந்தி தொடர்பாக ஏற்கனவே நமது ஆங்கில மொழிப் பிரிவினர் ஃபேக்ட்செக் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன் லிங்க் இதோ…

Fact Crescendo English Link

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:மதுராவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரோஹிங்கியா முஸ்லிம்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team

Result: MISSING CONTEXT