பத்திரிகையாளர்களை சந்திக்காதவர் என்று மோடியை விமர்சித்தாரா மேயர் பிரியா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

பத்திரிகையாளர்களை சந்திக்காத மோடி என்று பிரதமரை சென்னை மாநகராட்சி மேயல் பிரியா விமர்சித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பத்திரிகையாளர்களை சந்திக்காத மோடி! சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகள் சிறப்பாக நடைபெறுவதால், அதை தாங்கிக்கொள்ள முடியாத பாஜகவினர், நான் பேசும்போது ஏற்படும் சிறு வார்த்தை பிழைகளை கேலி செய்கிறார்கள். மோடி இதுவரை எத்தனை முறை பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார் என பாஜகவினர் சிந்திக்க வேண்டும்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நியூஸ் கார்டை Shanmugam Subramani என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 நவம்பர் 13ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதை வைத்து ஆளும், எதிர்க்கட்சிகள் சமூக ஊடகங்களில் சண்டையிட்டு வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி எத்தனை முறை பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார் என சென்னை மாநகராட்சி மேயர் கேள்வி எழுப்பியதாக சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரப்படுகிறது. அந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட், பின்னணி டிசைன் சன் நியூஸ் வெளியிட்டது போல இல்லை. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

பிரியா ராஜன் பிரதமர் மோடியை விமர்சித்து ஏதேனும் பேட்டி அளித்துள்ளாரா, அது ஊடகங்களில் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியானது.

சன் நியூஸ் தொலைக்காட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் 2022 நவம்பர் 13ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. எனவே, சன் நியூஸ் டிஜிட்டல் பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு இந்த நியூஸ் கார்டு பற்றிக் கேட்டோம். அதற்கு அவர், இப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. இந்த நியூஸ் கார்டை நாங்கள் வெளியிட்டது இல்லை; போலி”, என்றார். இதன் மூலம் பிரதமர் மோடியை சென்னை மேயர் பிரியா விமர்சித்தார் என்று பரவும் நியூஸ் கார்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பத்திரிகையாளர்களை சந்திக்காதவர் மோடி என்று சென்னை மேயர் பிரியா கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பத்திரிகையாளர்களை சந்திக்காதவர் என்று மோடியை விமர்சித்தாரா மேயர் பிரியா?

Fact Check By: Chendur Pandian 

Result: False