‘’வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை திமுக ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்வோம் – பொன்முடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’வன்னியர் வாக்கை நம்பி திமுக கட்சி நடத்தவில்லை. வன்னியர் இட ஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்வோம், வன்னியர் வாக்கை நம்பி கட்சி நடத்தவில்லை.! திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி,’’ என்று எழுதியுள்ளனர்.

இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதை காண நேரிட்டது.

உண்மை அறிவோம்:
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, வன்னியர் சமூகத்தினருக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, தமிழ்நாடு அரசு (அதிமுக) சமீபத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு, பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

இத்தகைய சூழலில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021ஐ மையமாக வைத்து, வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, பல்வேறு வதந்திகள் பகிரப்படுகின்றன. அவை பற்றி நாமும் உண்மை கண்டறிந்து வெளியிட்டு வருகிறோம்.

அந்த வரிசையில் இதுவும் ஒரு போலியான செய்திதான்.

இதுபற்றி நாம், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, ‘இது போலியான செய்தி,’ என்றனர்.

இதேபோல, கூடுதல் ஆதாரத்திற்காக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியின் உதவியாளரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவரும், ‘’இது போலியான செய்தி. தேர்தல் நேரத்தில் திமுகவை குறிவைத்து, இப்படியான வதந்திகளை சிலர் திட்டமிட்டே பகிர்கின்றனர்,’’ என்றார்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி, போலியான ஒன்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று பொன்முடி கூறவில்லை!

Fact Check By: Pankaj Iyer

Result: False