
‘’நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக.,வினர் பற்றி துரைமுருகன் கேலிப் பேச்சு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, இதனைப் பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட செய்தி உண்மையில், நியூஸ் 7 தமிழ் ஊடகம் வெளியிட்டதா என்று சந்தேகம் எழுந்தது. எனவே, நேரடியாக, நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர், இது தவறான தகவல் என்று கூறியதோடு, நியூஸ் 7 தமிழ் ஊடகம் வெளியிட்ட விளக்கத்தின் லிங்கையும் நமக்கு அளித்தார்.
அந்த லிங்கை கீழே இணைத்துள்ளோம்.
எனவே, நியூஸ் 7 தமிழ் ஊடகம் பெயரில் பகிரப்படும் மேற்கண்ட நியூஸ் கார்டு போலியானது என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:நயினார் நாகேந்திரன் பற்றி துரைமுருகன் கூறியதாகப் பரவும் செய்தி உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
