
‘’அறிஞர் அண்ணாவை சீண்டினால், சந்திரலேகாவுக்கு ஏற்பட்ட நிலைதான் ஆளுநர் ரவிக்கும் ஏற்படும்,’’ என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வேகமாகப் பரவுகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Tweet Claim Link l Archived Link
இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
‘தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றே அழைக்கலாம்’ என்று ஆளுநர் ரவி கருத்து கூறியிருந்தார். இதனை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் ஆளுநர் ரவியை எச்சரித்ததாகக் குறிப்பிட்டு மேற்கண்ட வகையில் சிலர் செய்தி பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால், இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை ஊடகம் வெளியிடவில்லை. இதுபற்றி அவர்களது டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தியுள்ளோம். அதேபோல, எடப்பாடி பழனிசாமியும் இவ்வாறு பேசவில்லை. இதுகுறித்து அதிமுக ஐ.டி.பிரிவு தரப்பிலும் பேசி உறுதி செய்துள்ளோம். எனவே, இந்த போலியான செய்தியை யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:தமிழ்நாடு பெயர் விவகாரம்; ஆளுநர் ரவிக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்தாரா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
