
‘’சேகர் பாபுவின் செயல் கண்டிக்கத்தக்கது,’’ என்று எச்.ராஜா பேசியதாகக் கூறி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இதே தகவலை ஃபேஸ்புக்கிலும் பலர் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.
Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
சென்னையை அடுத்த மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயிலில் அன்னதானம் மறுக்கப்பட்டதாக, நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் புகார் எழுப்பியிருந்தார். இந்த தகவல் ஊடகங்கள் வழியே பரவியதை தொடர்ந்து, அந்த பெண்ணை வரவழைத்து, அவருடன் ஒன்றாக அமர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அதே கோயிலில் அன்னதானம் சாப்பிட்டார். இந்த நிகழ்வுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
arokyasuvai link
இதன்பேரில், அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்து, எச்.ராஜா பேசியதாக மேற்கண்ட வகையில் பலரும் தகவல் பகிர்கின்றனர்.
நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்தின் லோகோவுடன் பகிரப்படும் இந்த செய்தியை உண்மையில், அந்த ஊடகம் வெளியிட்டதா என, அவர்களின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியை தொடர்பு கொண்டு, விளக்கம் கேட்டோம். அவர், ‘’இது எங்களது பெயரில் எடிட் செய்து பகிரப்படும் போலியான செய்தி,’’ என்றார்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:நரிக்குறவர்களுக்கு அன்னதானம்; சேகர் பாபுவை எச்.ராஜா கண்டித்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
