
‘’நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசியதை வெட்கக்கேடானது; பாஜக.,வில் இனியும் தொடர்வதா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்,’’ என்று நயினார் நாகேந்திரன் கூறியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மதுரை விமான நிலையத்திற்கு வந்த தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரை வழிமறித்து பாஜக.,வினர் செருப்பு வீசிய நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். அதன் பின்னர், பாஜக.,வில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார். அதேசமயம், அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் அறிவித்தார்.
Hindu Tamil Link I Dailythanthi Link
இத்தகைய சூழலில், டாக்டர் சரவணனை தொடர்ந்து, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனும் அக்கட்சியில் இருந்து விலக ஆலோசனை செய்து வருவதாகக் குறிப்பிட்டு சிலர் மேற்கண்ட வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மையில், நயினார் நாகேந்திரன் இப்படி எதுவும் கூறவில்லை. அதேபோல, ஜூனியர் விகடன் ஊடக தரப்பிலும் இவ்வாறு செய்தி வெளியிடவில்லை. இதுதொடர்பாக, நாம் பாஜக மற்றும் ஜூனியர் விகடன் டிஜிட்டல் பிரிவிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவு; பாஜக.,வை விட்டு விலகுவதாக நயினார் நாகேந்திரன் கூறினாரா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
