FactCheck: திமுக.,வின் அராஜக ஆட்சி என்று கமல்ஹாசன் குறிப்பிட்டதாகப் பரவும் வதந்தி!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’திமுக.,வின் அராஜக ஆட்சி வரக்கூடாது – கமல்ஹாசன்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், புதிய தலைமுறை லோகோவில் ஒரு தகவல் பகிரப்பட்டுள்ளது. அதில், ‘’திமுகவின் அராஜக ஆட்சி மீண்டும் வந்துவிடவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் உண்மையா என்றால், அது போலியானதுதான். ஏனெனில், கமல்ஹாசன் பற்றி புதிய தலைமுறை சமீபத்தில் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு வேறு ஒன்றாகும்.

இதுபற்றி புதிய தலைமுறை ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி மனோஜை தொடர்புகொண்டு நாம் விளக்கம் கேட்டோம்.

குறிப்பிட்ட நியூஸ் கார்டை பார்வையிட்ட அவர், ‘’இது வழக்கம்போல எங்களது பெயரில் பகிரப்படும் போலியான நியூஸ் கார்டு. நாங்கள் இதனை வெளியிடவில்லை,’’ என்றார்.

எனவே, நாம் ஆய்வு செய்யும் தகவல் போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:திமுக.,வின் அராஜக ஆட்சி என்று கமல்ஹாசன் குறிப்பிட்டதாகப் பரவும் வதந்தி!

Fact Check By: Pankaj Iyer 

Result: False