
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தான் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் ஒரு ரூபாய் பிஎம் கேர்ஸ்க்கு வழங்கப்படும் என்று கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தந்தி டி.வி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா world test Championship இறுதிப் போட்டியில் தான் அடிக்கும் ஒரு ஒரு ரன்னுக்கும் ஒரு ரூபாய் PM Care Fundக்கு நன்கொடை வழங்குவதாக தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Keerthika RO என்பவர் 2021 ஜூன் 8ம் தேதி பகிர்ந்திருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவேன்:
கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது 80 லட்ச ரூபாயை வழங்கியவர் கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா. தற்போது அவரை வைத்து சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருவது வருத்தத்தை அளிக்கிறது. இதை பார்க்கும் போதே இது போலியான நியூஸ் கார்டு என்று தெரிந்தது. வழக்கமாக தந்தி டி.வி வெளியிடும் நியூஸ் கார்டை எடிட் செய்திருப்பது தெரிகிறது. மேலும் இதில் உள்ள தமிழ் ஃபாண்ட் வழக்கமாக தந்தி டிவி பயன்படுத்தும் தமிழ் ஃபாண்ட் இல்லை.
ரோஹித் ஷர்மாவை பிடிக்காதவர்கள் யாராவது கிண்டலுக்காக இதை செய்திருக்கலாம் என்று தெரிந்தது. சமீபத்தில் ரோஹித் ஷர்மா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பற்றி ஏதும் தெரிவித்துள்ளாரா என்று பார்த்தோம். அப்போது “இனிதான் ரோகிக் சர்மாவின் சிறந்த இன்னிங்சை பார்க்க இருக்கிறீர்கள்” என்று கிரிக்கெட் பயிற்சியாளர் தெரிவித்ததாக செய்திகள் நமக்குக் கிடைத்தன. இதை வைத்து ரோஹித் ஷர்மாவை கிண்டல் செய்திருக்கலாம் என்று தெரிந்தது.

அசல் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive
ஜூன் 8, 2021 அன்று தந்தி டிவி ரோஹித் ஷர்மா, கிரிக்கெட் தொடர்பாக நியூஸ் கார்டு எதையும் வெளியிட்டுள்ளதா என்று பார்த்தோம். அப்போது, இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு தந்தி டிவி பதிவு வெளியிட்டிருப்பது தெரிந்தது.
சமூக ஊடகங்களில் வைரலா பரவும் நியூஸ் கார்டின் மீது “FAKE” என்று முத்திரை குத்தி அது தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டிருந்தது.
நம்முடைய ஆய்வில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தான் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் ஒரு ரூபாய் பி.எம். கேர்ஸ்க்கு வழங்குவேன் என்று ரோஹித் ஷர்மா கூறியதாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை. இந்த நியூஸ் கார்டு போலியானது என்று தந்தி டிவி உறுதி செய்துள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தான் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் ஒரு ரூபாய் பிஎம் கேர்ஸ்க்கு வழங்கப்படும் என்று ரோஹித் ஷர்மா கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Title:நான் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் ஒரு ரூபாய்; பிரதமர் நிதிக்கு தருவேன் என்று ரோஹித் ஷர்மா கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
