FACT CHECK: சமூக ஊடகங்களில் போலி படங்கள் விவகாரம்… பெரியார், சீமான் படத்துடன் நியூஸ் கார்டு வெளியிட்டதா சன் நியூஸ்?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

சமூக ஊடகங்களில் போலி, எடிட் செய்யப்பட்ட படங்கள் பகிரப்படுவதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரிவிட்டது தொடர்பான செய்திக்கு பெரியார் மற்றும் பிரபாகரனுடன் சீமான் நிற்கும் புகைப்படங்களை வைத்து சன் நியூஸ் தொலைக்காட்சி நியூஸ் கார்டை வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதில் எது உண்மை என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சமூக வலைதள நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு! போலி படம் மற்றும் பிரபலங்களுடன் நிற்பது போன்று உருமாற்றம் செய்து உருவாக்கப்படும் சமூக வலைதள கணக்குகளை புகார் தெரிவித்த 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவு!” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை Rajarathinam Sivasankaran என்பவர் 2021 ஜூன் 26ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இதே நியூஸ் கார்டில் பிரபாகரன் படத்துக்கு பதில் பெரியார் படத்தை வைத்து சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். Mari S என்பவர் 2021 ஜூன் 25ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இதை பதிவிட்டுள்ளார். இதையும் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சன் நியூஸ் வெளியிட்டது என்று ஒரே மாதிரி இரண்டு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. தகவல் உண்மைதான். அது எடிட் செய்யப்பட்டது போல் இல்லை. ஆனால் புகைப்படம் மற்றும் மாற்றப்பட்டிருப்பது தெரிந்தது. பிரபாகரன் – சீமான் படத்துக்குப் பின்னால் வேறு ஏதோ படம் இருப்பதைக் காண முடிந்தது. 

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சன் நியூஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் ஜூன் 24ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அப்போது, சன் நியூஸ் வெளியிட்டிருந்த அசல் நியூஸ் கார்டு கிடைத்தது. அதில் பெரியார் படமும் இல்லை, பிரபாகரன் படமும் இல்லை. பிரதமர் மோடி சமூக ஊடக பக்கம் ஒன்றை பார்ப்பது போன்ற படம்தான் இருந்தது. சன் நியூஸ் வெளியிட்டிருந்த இந்த பதிவை ஒரு சிலரே ஷேர் செய்திருந்தனர். அதே நேரத்தில் அதை வைத்து போலியாக உருவான பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருவது வேடிக்கையாக இருந்தது.

நம்முடைய ஆய்வில் சன் நியூஸ் வெளியிட்ட அசல் நியூஸ் கார்டு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் பெரியார் மற்றும் பிரபாகரன் படத்துடன் பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தி.மு.க யானை என்றால் அதன் சாணி அ.தி.மு.க என்று எச்.ராஜா கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:FACT CHECK: சமூக ஊடகங்களில் போலி படங்கள் விவகாரம்… பெரியார், சீமான் படத்துடன் நியூஸ் கார்டு வெளியிட்டதா சன் நியூஸ்?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered