‘அரபுக்கள் நாம் இந்து ராஷ்டிரத்தை எதிர்ப்போம்’ என்று திருமாவளவன் புத்தகம் வெளியிட்டாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’அரபுக்கள் நாம் இந்து ராஷ்டிரத்தை எதிர்ப்போம் என்ற புத்தகத்தை வெளியிட்ட திருமாவளவன்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

‘அரபுக்கள் நாம் இந்து ராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்‘ என்று திருமாவளவன் புத்தகத்தை வெளியிட்டதாக, இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்: 

நாம் குறிப்பிட்ட தகவல் உண்மையா என விவரம் தேடினோம். இதுபற்றி முதலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தரப்பில் விசாரித்தபோது, இது போலியான செய்தி என்றும், திருமாவளவன் அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார் என்றும் தெரிவித்தனர்.

நாமும் திருமாவளவன் ட்விட்டர் பக்கம் சென்று பார்த்தபோது, அவர் இதுகுறித்து வெளியிட்ட பதிவை கண்டோம். அதில், ‘’இந்து ராஷ்டிரத்தை எதிர்கொள்வோம் என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டேன். அந்த புத்தக வெளியீடு தொடர்பான புகைப்படத்தை எடிட் செய்து, சனாதன சக்திகள் தவறான தகவலை பரப்பி வருகின்றனர்,’’ என்று திருமாவளவன் விளக்கம் அளித்து, ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார்.

Archived Link

எனவே, திருமாவளவன் வெளியிட்ட புத்தகத்தின் தலைப்பை எடிட் செய்து, மேற்கண்ட வகையில் சிலர் வதந்த பகிர்ந்து வருவதாகச் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:‘அரபுக்கள் நாம் இந்து ராஷ்டிரத்தை எதிர்ப்போம்’ என்று திருமாவளவன் புத்தகம் வெளியிட்டாரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False