FactCheck: ஆந்திராவில் உள்ள கோயிலில் சிலுவை வரைந்த கிறிஸ்தவர்கள்?- விவரம் இதோ!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’ஆந்திராவில் உள்ள கோயிலில் சிலுவை வரைந்த கிறிஸ்தவர்கள்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim Link Archived Link

ஜனவரி 18, 2021 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ஆந்திராவில் உள்ள ஒரு கோயிலில் பாவாடைகள் செய்த அட்டகாசம்,’’ என்று எழுதியுள்ளனர்.

இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு செய்ய தொடங்கிய அதே வேளையில், இந்த பதிவு மலையாளத்திலும் கூட பகிரப்படுவதைக் கண்டோம். ஆனால், அதில், தமிழ்நாட்டில் உள்ள திருப்பத்தூர் வட்டாரத்தில் நிகழ்ந்த சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளதைக் கண்டோம். 

Facebook Post LinkArchived Link

இதன்பேரில், நாம் கூடுதலாக தகவல் தேடியபோது, இது தமிழ்நாட்டில் உள்ள நாட்றம்பள்ளி வட்டாரத்தில் நிகழ்ந்த சம்பவம்தான் என உறுதிப்படுத்தும் வகையில் செய்தி இணைப்புகள் கிடைத்தன.

DailyHunt LinkKathir News Link

தொடர்ந்து, தேடியபோது இதுபற்றி தரப்பட்ட போலீஸ் புகார் விவரமும் கிடைத்தது. 

இதில், புகார் தரப்பட்டுள்ள செல்பேசி எண்ணிலும் பேசி உறுதிப்படுத்தினோம்.

எனவே, நாட்றம்பள்ளி அருகே உள்ள எல்லப்பள்ளி கிராமத்தில் நிகழ்ந்த சம்பவத்தின் புகைப்படத்தை எடுத்து, ஆந்திராவில் நிகழ்ந்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருகின்றனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவலில் முழு உண்மையில்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:ஆந்திராவில் உள்ள கோயிலில் சிலுவை வரைந்த கிறிஸ்தவர்கள்?- விவரம் இதோ!

Fact Check By: Pankaj Iyer 

Result: PartlyFalse