‘’தமிழ்ப் பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டிலேயே இருக்கும்படி யோகி ஆதித்யநாத் கூறினார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இந்த நியூஸ் கார்டை, வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தனர்.

இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, ஏராளமானோர் இதனை உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருவதைக் கண்டோம்.

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் மேற்கொள்வதற்காக, தமிழ்நாடு வந்தார். இதனையொட்டி, சமூக வலைதளங்களில் அவரை பற்றி கேலி செய்தும், விமர்சனம் செய்தும் வித விதமான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் பலவும் வதந்தியாக உள்ளன.

நாமும் கூட அவற்றின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்து, செய்தி வெளியிட்டு வருகிறோம்.

Fact Crescendo Tamil Link

இந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு போலிச் செய்தியே, மேலே நாம் கண்டதும். உண்மையில், தந்தி டிவி அப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை; யோகி ஆதித்யநாத்தும் அப்படி பேசவில்லை.

இதுபற்றி தந்தி டிவி ஆசிரியர் குழுவில் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம். யோகி ஆதித்யநாத் தமிழ்நாடு வருகை பற்றி தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டு வேறு ஒன்றாகும். அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

எனவே, யோகி ஆதித்யநாத் பேசாத ஒன்றை உண்மை போல குறிப்பிட்டு, தகவல் பகிர்ந்துள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:தமிழ்ப் பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டிலேயே இருக்கும்படி யோகி ஆதித்யநாத் கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False