
‘’வழக்கறிஞர்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது ஏராளமானோர் ஃபேஸ்புக்கில் இதனை ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
இந்த தகவல் தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் வைரலாக பரவியதை தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டே தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) தெளிவாக விளக்கம் ஒன்றை அளித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதனை கீழே இணைத்துள்ளோம்.
வழக்கறிஞர்களுக்கு எந்த சலுகையும் இல்லை, அவர்களும் சாமானிய மக்களைப் போல சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியதுதான் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இதுபற்றி PIB India வெளியிட்ட ட்விட்டர் லிங்கையும் கீழே இணைத்துள்ளோம்.
எனவே, நாடு முழுக்க சுங்கச் சாவடிகளில் வழக்கறிஞர்களுக்கு கட்டணம் இல்லை, என பகிரப்படும் செய்தி தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:வழக்கறிஞர்களுக்கு சுங்கக் கட்டணம் கிடையாது என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…
Fact Check By: Pankaj IyerResult: False
