‘’ராட்சத கற்களை சுமந்து செல்லும் அளவுக்கு அந்தக் கால மக்கள் மிகுந்த பலசாலிகளாக இருந்திருக்க வேண்டும்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ இது ஒரு பழைய படம்

இந்த படத்தில் இருப்பவர்கள் எப்படி இந்த கல்லை தூக்கி இருப்பார்கள்... ஒன்று அந்தக் காலத்தில் புவியீர்ப்பு விசை குறைவாக இருந்திருக்க வேண்டும்... அல்லது அந்த மனிதர்கள் மிகுந்த பலசாலிகளாக இருந்திருக்க வேண்டும்.... ஏனென்றால் அந்தக் காலத்தில் போட்டோஷாப் என்பதெல்லாம் கிடையாது.. ஆகவே இது ஒரிஜினல் போட்டோவாக தான் இருக்க வேண்டும்...’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட புகைப்படம் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம், என்ற சந்தேகம் நமக்கு ஏற்பட்டது. இதன்பேரில் நாம் Hive Moderation என்ற செயற்கை நுண்ணறிவை கண்டறியும் இணையதளத்தில் இந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, விவரம் தேடினோம்.

அப்போது, குறித்த புகைப்படம் 72.7% செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒன்று, என தெரியவந்தது.

மேலும் fakeimagedetector.com இணையத்திலும் இதனை நாம் ஆய்வு செய்த போது, இது கணினி மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்தது.

மேலும் சில இணையதளங்களில் பதிவேற்றி பார்த்தபோதும் நமக்கு இதே முடிவுதான் கிடைத்தது.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘ராட்சத கற்களை சுமந்து செல்லும் பலசாலி தமிழர்கள்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False