மூவர்ண சட்டை அணிந்தால்தான் தேசப்பற்று… விஷமம் பரப்பும் சமூக ஊடக பதிவு!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் தேசியக் கொடியின் மூவர்ண சட்டை அணிந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, தமிழ் நடிகர்களுக்கு தேசப் பற்று இல்லை என்பது போன்று பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சண்முகம் சண்முகம் என்பவர் 2022, ஆகஸ்ட் 12 அன்று வெளியிட்டிருந்த பதிவை சத்ரபதி வீர சிவாஜியின் காவிப்படை தளபதிகள் என்ற ஃபேஸ்புக் பக்கம் பகிர்ந்திருந்தது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் இந்திய தேசியக் கொடியில் உள்ள மூவர்ணத்தினால் ஆன சட்டையை அணிந்திருப்பது போன்று படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நம்ம ஊரு கூத்தாடிகள் என்ன செய்கிறார்கள்…..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

மூவர்ணக் கொடியை சட்டையாக அணிந்தால்தான் தேசப்பற்று என்பது போன்று பதிவிட்டுள்ளனர். “நம்மவூர் கூத்தாடிகள் திராவிஷ கைக்கூலிகள்” என்று கமெண்ட் செய்திருக்கின்றனர். குறிப்பிட்ட கட்சி ஆதரவு சமூக ஊடக பக்கங்களில் இந்த பதிவு அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டிருந்தது. தேசியக் கொடியில் உள்ள மூன்று நிறத்தில் சட்டையைப் போட்டால் தான் தேசப்பற்று என்று எதன் அடிப்படையில் உறுதி செய்தார்கள் என்று தெரியவில்லை.

உண்மைப் பதிவைக் காண: imdb.com I Archive

உண்மையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் இந்திய தேசியக் கொடியின் நிறத்தில் சட்டை அணிந்திருந்தாரா என்று ஆய்வு செய்தோம். புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, நமக்கு உண்மையான புகைப்படம் கிடைத்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தெலுங்கு படத்தில் இருந்து இந்த புகைப்படத்தை எடுத்திருப்பது தெரிந்தது.

ஆனால், அந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் மூவர்ண நிறத்தில் சட்டை அணிந்திருக்கவில்லை. வழக்கமான சட்டையையே அணிந்திருந்தார். அல்லு அர்ஜூனின் இந்த புகைப்படத்தை எடுத்து எடிட் செய்து, மூவர்ண சட்டையாக மாற்றியுள்ளனர். தேசியக் கொடியில் சட்டை அணிந்துவிட்டாலே மற்ற மொழி நடிகர்களுக்கு தேசப்பற்று வந்துவிடுவது போன்றும், தமிழ்நாட்டில் இப்படி தேசியக் கொடியில் சட்டை அணியாமல் தேசப்பற்று இல்லாமல் இருக்கிறார்கள் என்ற வகையில் பதிவிட்டிருப்பது தெளிவாகிறது.

முடிவு:

மேற்கண்ட பதிவு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மூவர்ண சட்டை அணிந்தால்தான் தேசப்பற்று… விஷமம் பரப்பும் சமூக ஊடக பதிவு!

Fact Check By: Chendur Pandian 

Result: Altered