
‘’கோழிகள் அதிக புழுக்களை தின்றதால் சத்துணவு முட்டையில் புழுக்கள் வந்திருக்கலாம்,’’ என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாக, ஒரு செய்தியை பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதன் நம்பகத்தன்மை பற்றி பார்க்கலாம்.
தகவலின் விவரம்:

Twitter Claim Link I Archived Link
இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் வழியே அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட நியூஸ் கார்டில், ஜூனியர் விகடன் என்பதற்குப் பதிலாக, சீனியர் விகடன் என்று எழுதப்பட்டுள்ளது. அதுதவிர, ஃபாண்ட் சீரான முறையில் இல்லை. இது பார்ப்பதற்கு, ஜூனியர் விகடன் வெளியிட்ட மற்றொரு செய்தியை எடுத்து, எடிட் செய்து பகிர்ந்துள்ள போலியான செய்தி, என தெளிவாகக் காட்டும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் சில இடங்களில் ஜூனியர் விகடன் லோகோ மறைக்கப்பட்டும் உள்ளது.

சமீபத்தில், கரூர் மாவட்டம், நாகனூர் அரசு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் சத்துணவுத் திட்டத்தின்கீழ் விநியோகிக்க வைத்திருந்த முட்டைகளில் புழுக்கள் நெளிந்ததாக, புகார் வெளியானது. இதன்பேரில், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரடி ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட பள்ளியின் சத்துணவு அமைப்பாளர், சமையல் ஊழியர், தலைமை ஆசிரியர் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்ததாக, ஊடகங்களில் செய்தி பகிரப்பட்டது.
இதனை தந்தி டிவி பிரத்யேக செய்தியாக முதலில் வெளியிட்டு, தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்த்திருந்தது.
இந்த பின்னணியில்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெயரில் மேற்கண்ட செய்தியை பாஜக ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இது போலியான நியூஸ் கார்டு. உண்மையான நியூஸ் கார்டுடன் இதனை ஒப்பிட்டு கீழே இணைத்துள்ளோம்.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாக பாஜக ஆதரவாளர்கள் பரப்பும் போலியான செய்தி…
Fact Check By: Pankaj IyerResult: Altered
