‘’தமிழர்களை இழிவுபடுத்தி துக்ளக் பத்திரிகை கார்ட்டூன் வெளியிட்டுள்ளது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

மேற்கண்ட கார்ட்டூனை, நமது வாசகர் ஒருவர், வாட்ஸ்ஆப் வழியே நமக்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். அதனை சற்று பெரிபடுத்தி கீழே இணைத்துள்ளோம்.

இது, 7.06.2017 தேதியிட்டு வெளிவந்த துக்ளக் பத்திரிகையின் அட்டைப் புகைப்படம் ஆகும். அதில், ஒரு கார்ட்டூனும் இடம்பெற்றுள்ளது. அந்த கார்ட்டூனில், எறும்புகள் போன்ற உருவத்தின் மீது ‘தமிழர்கள்’ என்றும், ‘எதிர்ப்பாளர்கள்’ என்றும் எழுதியுள்ளனர்.

இதனை பார்க்கும்போது, தமிழர்களை எறும்பு போல சித்தரித்து, ரஜினி வேனில் நசுங்கிவிடுவார்கள் எனக் குறிப்பிடுவதாக, அர்த்தம் எழுகிறது. எனவே, பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2
Facebook Claim Link 3Archived Link 3

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட கார்ட்டூனை நன்கு உற்று கவனித்தால், அதில், ‘’தமிழர்கள்‘’
என எழுதியிருக்கும் வார்த்தைக்கும், இதர வார்த்தைகளுக்கும் ஃபாண்ட் வித்தியாசம் உள்ளது, தெரியவருகிறது. எனவே, இது உண்மையாக இருக்குமா, சித்தரிக்கப்பட்டதா என சந்தேகம் எழுகிறது.

எனவே, குறிப்பிட்ட 07.06.2017 தேதியிட்ட கார்ட்டூன் (துக்ளக் பத்திரிகையின் அட்டைப் படம்) கிடைக்கிறதா என விவரம் தேடினோம். அப்போது, உண்மையான கார்ட்டூன் படம் கிடைத்தது. அதில், தமிழர்கள் என்ற வார்த்தை இல்லை.

Twitter Post LinkArchived Link

இதனை கடந்த சில மாதங்களாகவே, அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் எடிட் செய்து, ‘தமிழர்கள்‘ என்ற வார்த்தையை சேர்த்து, தமிழர்களுக்கு எதிராக துக்ளக் பத்திரிகை செயல்படுவதாகக் கூறி வதந்தி பரப்பி வருகின்றனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:தமிழர்களை இழிவுபடுத்தி துக்ளக் பத்திரிகை கார்ட்டூன் வெளியிட்டதா?

Fact Check By: Pankaj Iyer

Result: False