பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டம் நிறுத்தப்படும் என்றாரா அமைச்சர் ராஜ கண்ணப்பன்?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’நிதிநிலை பற்றாக்குறையால் விரைவில் அரசு பேருந்தில் பெண்கள் பயணிக்கும் இலவச திட்டம் நிறுத்தப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு,’’ என குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, திமுக ஆட்சி அமைந்ததும், நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலமாக, படிக்க மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் பயன்பெறுவர் என கூறப்பட்டது. இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Frontline Link

இந்த சூழலில், இதனை நிறுத்தப் போவதாக, அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார் என்று குறிப்பிட்டு, மேற்கண்ட வகையில் சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். இது, உண்மையான நியூஸ் கார்டு அல்ல. இதுபற்றி ABP Nadu ஊடகம் தரப்பில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

எனவே, மேற்கண்ட நியூஸ் கார்டு போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டம் நிறுத்தப்படும் என்றாரா அமைச்சர் ராஜ கண்ணப்பன்?

Fact Check By: Pankaj Iyer 

Result: False