பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டதாக ஒரு செய்தி பரவுகிறது. இதுபற்றி பார்க்கலாம்.

தகவலின் விவரம்:

Twitter Claim Link I Archived Link

இதனை வாசகர் ஒருவர் நமக்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார்.

உண்மை அறிவோம்:
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் படித்த மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி நாள்தோறும் புதுப்புது தகவல்கள் பகிரப்படுகின்றன. அவற்றில் பலவும் வதந்தியாகவே உள்ளன. அவை பற்றி நாமும் அவ்வப்போது செய்தி வெளியிட்டு வருகிறோம்.

அந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு போலியான செய்தியே மேற்கண்ட நியூஸ் கார்டு. ‘’இதனை நாங்கள் வெளியிடவில்லை,’’ என்று நியூஸ் 7 தமிழ் ஊடகம் ஏற்கனவே மறுப்பு தெரிவித்துள்ளது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False