பாஜக எம்எல்ஏ அனில் உபாத்யாய் போலீஸ் அதிகாரியை அடித்தாரா?

அரசியல் | Politics

‘’பாஜக எம்எல்ஏ அனில் உபாத்யாயின் இந்த செயல் குறித்து மோடி என்ன கூறுவார்,’’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவுவதைக் காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

நெற்றிக்கண் மனோஹரன் என்பவர் இந்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ஒரு இளைஞர் போலீஸ் அதிகாரியை தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன் மேலே, ‘’ B.J.P எம்.எல்.ஏ அனில் உபாத்யாயின் இந்த செயல் குறித்து மோடி என்ன கூறுவார், இந்த வீடியோவை இந்தியா முழுவதையும் பார்க்கும் அளவுக்கு வைரல் செய்யுங்கள்,’’ எனக் கூறியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இதில் கூறியுள்ளதுபோல அந்த வீடியோவில் போலீஸ் அதிகாரியை தாக்குபவர் பாஜக எம்எல்ஏ.,தானா என்ற சந்தேகத்தில் கூகுளில் தகவல் தேடிப் பார்த்தோம். அப்போது சில விவரங்கள் கிடைத்தன. 

இதன்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ செய்தி, கடந்த மே மாதம் முதலாக, சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் கூறப்படுவது போல பாஜக எம்எல்எ அனில் உபாத்யாய் என உண்மையில் யாரும் இல்லை. இந்த பெயரை பயன்படுத்தி, இவர் பாஜக எம்எல்ஏ, காங்கிரஸ் எம்எல்ஏ என்றும், இவர் போலீஸ் அதிகாரியை அடித்துவிட்டார், இவர் தலித் மக்களை தாக்கிவிட்டார் என பலவிதமான வதந்திகள் பரவி வருகின்றன. இதில் எதுவும் உண்மையில்லை. வதந்தி பரப்புவோர் உருவாக்கிய கற்பனை கதாபாத்திரமே அனில் உபாத்யாய் என்று தெளிவாகிறது. இதுபற்றி ஏற்கனவே பூம்லைவ் உண்மை கண்டறியும் சோதனை செய்து, அந்த முடிவுகளை சமர்ப்பித்துள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

சரி, இந்த வீடியோவில் போலீஸ் அதிகாரியை தாக்குபவர் யார் என்று கேட்கறீர்களா? அவர் உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த பாஜக கவுன்சிலர் மணிஷ் குமார் ஆவார். அவர் பற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி குடிபோதையில் இருந்ததால் அவரை கவுன்சிலர் மணிஷ் குமார் தாக்கியிருக்கிறார். இது 2018ல் நிகழ்ந்த சம்பவமாகும். இதற்காக, குறிப்பிட்ட கவுன்சிலர் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றிய செய்தி விவரம் கீழே தரப்பட்டுள்ளது. 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட வீடியோ 2018ல் எடுக்கப்பட்டது, இதில் போலீசை தாக்குபவர் உத்தரப் பிரதேச பாஜக கவுன்சிலர் மணிஷ் குமார். அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுக்கப்பட்டுள்ளார். இவர்கள் குறிப்பிடுவது போல, பாஜக எம்எல்ஏ உபாத்யாய் என யாருமே இல்லை. 

எனவே, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான தகவல் என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை யாரும் உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:பாஜக எம்எல்ஏ அனில் உபாத்யாய் போலீஸ் அதிகாரியை அடித்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False