
‘’அண்ணாமலையை கைது செய்தால் தீக்குளிப்பேன்,’’ என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வரும் சூழலில், அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

சாணக்யா லோகோவுடன் பகிரப்பட்டுள்ள மேற்கண்ட நியூஸ் கார்டில், ‘’அண்ணாமலை ஜீயை கைது செய்தால் தீக்குளிப்பேன், அரசியல் செய்வதுதான் அரசியல் கட்சியின் வேலை. நாங்கள் மாணவியின் போலி வீடியோவை வைத்து அரசியல் செய்தோம். இதற்காக அண்ணாமலையை கைது செய்யக் கூடாது. – இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் ஷேர் செய்து வருகின்றனர்.

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் படித்து வந்த லாவண்யா என்ற மாணவி சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடும் வாக்குவாதம் நிலவும் சூழலில், இவ்விவகாரத்தை மையமாக வைத்து, நாள்தோறும் புதுப்புது வதந்திகள் சமூக வலைதளங்களின் வழியே பரப்பப்படுகின்றன.
அவை பற்றி நாமும் ஆய்வு செய்து, அவ்வப்போது கட்டுரை வெளியிட்டு வருகிறோம். அந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்தியே மேற்கண்ட நியூஸ் கார்டு. இதுபற்றி நாம், சாணக்யா நிறுவனர் ரங்கராஜ் பாண்டேவை தொடர்பு கொண்டு பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:அண்ணாமலையை கைது செய்தால் தீக்குளிப்பேன் என்று அர்ஜூன் சம்பத் கூறவில்லை!
Fact Check By: Pankaj IyerResult: False
