‘’திருப்பரங்குன்றத்தில் மேள தாளம் இல்லாமல் நடந்த சாமி ஊர்வலம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ கொட்டு மேளத்துக்கு தடை!!

திருப்பரங்குன்றத்தில் மேள தாளம் இல்லாமல் நடந்த சாமி ஊர்வலம்...,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Archived Link l Claim Link 1 l Claim Link 2

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என நாம் விவரம் தேடியபோது, இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ஃபேக்ட்செக் குழு விளக்கம் அளித்துள்ளதைக் கண்டோம்.

அதில், ‘’கொட்டு மேளத்துக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. மதுரை திருப்பரங்குன்றம் சித்தி விநாயகர் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு, கடந்த 17.08.2024 அன்று முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, இளைஞர்கள் சிலர் மது போதையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்து, ஆட்டம் போட்டனர். இதையடுத்து, அங்கிருந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக, அனைவரையும் அமைதிப்படுத்தி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியை உடனே அவர்கள் கடந்து செல்லும்படி செய்தனர். மற்றபடி அங்கே மேள தாளம் இசைக்க எந்த தடையும் விதிக்கப்படவில்லை’’, என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

X Post Link 1 l X Post Link 2

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல், தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:‘திருப்பரங்குன்றத்தில் மேள தாளம் இல்லாமல் நடந்த சாமி ஊர்வலம்’ என்ற தகவல் உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team

Result: MISLEADING