
‘’பாடகர் கோவன் இன்று அதிகாலை திடீர் மரணம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இந்த ஃபேஸ்புக் பதிவில், புதிய தலைமுறை லோகோவுடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’சமூக ஆய்வாளர் கோவன் இன்று அதிகாலை திடீர் மாரடைப்பால் காலமானார்,’’ என எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

Screenshot: FB posts with similar caption
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட நியூஸ் கார்டு உண்மையிலேயே புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டதா என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பேரில், நாம் புதிய தலைமுறையின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். ‘’இவ்வாறு எந்த செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை, இது எங்களது பெயரில் பகிரப்படும் போலிச் செய்தி,’’ என்று அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, இதுபோல வேறு ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா, என்று விவரம் தேடினோம். அப்போது, இது கடந்த ஜூன் , 2021 மாதத்தில் பரவிய வதந்தி என்றும், இது விஷமத்தனமாக உள்ளது என்று கூறி கோவன் தரப்பில் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது என்றும் ஊடகங்களில் வெளியான செய்தியை கண்டோம்.

Vikatan News Link I Archived Link
இதன்படி, ‘’முந்தைய அதிமுக ஆட்சியில் மது விற்பனையை விமர்சித்து, பாடல் பாடியதற்காக கோவன் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் தற்போதைய திமுக ஆட்சியில் கொரோனா தொற்றுக்கு இடையே டாஸ்மாக் திறக்கப்பட்டது பற்றி எதுவும் கருத்து தெரிவிக்காமல் இருப்பதால், அவர் இறந்துவிட்டார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வதந்தியை பகிர்ந்து வருவதாக, தெரியவருகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:பாடகர் கோவன் இறந்துவிட்டதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: False
