
பா. ரஞ்சித், அவரது மனைவி மற்றும் விடுதலை சிகப்பி ஆகியோரை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Tweet Claim Link l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
வைணவக் கடவுள் ராமனை அவமதிக்கும் வகையில் கவிதை படித்ததாகக் கூறி பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
News18 Tamil Link l The Hindu Link
இந்நிலையில், விடுதலை சிகப்பிக்கும் பா. ரஞ்சித் மனைவிக்கும் தொடர்பு உள்ளதாக, மேற்கண்ட வகையில் சிலர் செய்தி பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படத்தை பார்க்கும்போது, இது ‘குமுதம்’ வார இதழ் வெளியிட்ட அட்டை படம் போல உள்ளது. ஆனால், நன்றாகக் கவனித்தால், இது குமுதம் பெயரை தவறாகப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போலியான அட்டைப்படம் என்று தெரிகிறது.

குமுதம் என்பதற்குப் பதிலாக, குமுதா என்று எழுதப்பட்டுள்ளது. இதை வைத்தே இது ஒரு விஷமத்தனமான செய்தி என்பதை உறுதி செய்ய முடிகிறது. கூடுதல் சந்தேகத்திற்கு நாம் இதுபற்றி குமுதம் வார இதழ் ஆசிரியர் குழுவையும் தொடர்பு கொண்டு பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் உண்மையானதல்ல என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title: பா. ரஞ்சித் மற்றும் விடுதலை சிகப்பி பற்றி பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…
Fact Check By: Fact Crescendo TeamResult: False
