பெண் நீதிபதியும் வழக்கறிஞரும் தாக்கிக்கொண்டனர் என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

மகாராஷ்டிராவில் பெண் நீதிபதியும் பெண் வழக்கறிஞரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இரண்டு வழக்கறிஞர்கள் தாக்கிக்கொள்ளும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், மகாராஷ்டிரா நீதிமன்றத்தில் நீதிபதியுடன் வழக்கறிஞர் மோதல் என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதியும், பெண் வக்கீலும் கட்டிப்புரண்டு குடுமிபிடி சண்டை காட்சிகள் வைரல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோ பதிவை Kks Tamil Kks Tamil என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மார்ச் 1ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. தற்போது, அந்த வீடியோவை எடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் நீதிபதியும் பெண் வழக்கறிஞரும் தாக்கிக்கொண்டனர் என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் தவறானது என்பது தெரியும் என்பதால், இதை உறுதி செய்வதற்கான ஆய்வை மேற்கொண்டோம்.

Archive I avaaz24.com I Archive

உத்தரப்பிரதேசம், பெண் வழக்கறிஞர்கள் மோதல் என சில குறிப்பிட்ட கீ வார்த்தைகளை டைப் செய்து கூகுளில் தேடினோம். அப்போது பல்வேறு ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன. அவற்றைப் பார்த்த போது, உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இருவரும் தாக்கிக்கொண்டாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இரண்டு வழக்கறிஞர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில்தான் நடந்ததா என்பதை உறுதி செய்ய நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி குழுவிடம் இது பற்றிக் கேட்டோம். வழக்கறிஞர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காஸ்கஞ்ச் போலீசார் ட்வீட் பதிவு செய்திருப்பதாகவும் இதன் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோவில் கட்டுரை வெளியிட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archive

நம்முடைய ஆய்வில் வழக்கறிஞர்கள் இருவரும் சண்டையிட்டுக்கொண்ட வீடியோ உத்தரப்பிரதேசத்தில் நடந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தாக்கிக்கொண்ட இரண்டு பேருமே வழக்கறிஞர்கள்தான்… இவர்களில் ஒருவர் நீதிபதி என்ற தகவல் தவறானது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பெண் வழக்கறிஞர்கள் தாக்கிக்கொண்ட வீடியோவை எடுத்து மகாராஷ்டிராவில் நீதிபதியும் வழக்கறிஞரும் தாக்கிக்கொண்டனர் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பெண் நீதிபதியும் வழக்கறிஞரும் தாக்கிக்கொண்டனர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False