
‘’ சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்ட படகு சேவை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ சென்னை கடற்கரை வரை செல்லும் அடுத்த படகு இன்னும் சில நொடிகளில் இரண்டாவது பிளாட் பாரத்திலிருந்து புறப்படும். Chennai beach railway station,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சென்னை மாநகரை மிக்ஜாம் என்ற புயல் தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது.
இதையொட்டி சமூக வலைதளங்களில் பல்வேறு படங்கள் பகிரப்படுகின்றன. இதில் ஒன்றுதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலும்…
ஆனால், இந்த ரயில்வே நிலையத்தில் படகு செல்வது போன்ற புகைப்படம் மும்பையில் எடுக்கப்பட்டதாகும். இந்த படம் கடந்த 2015ம் ஆண்டு முதலே சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒன்றாகும்.
அவ்வப்போது மும்பையில் மழை பெய்தால் இதே படத்தை பயன்படுத்தி ஊடகங்கள் செய்தி வெளியிடுவதும் வழக்கம்.
கூடுதல் ஆதாரத்திற்காக நாம் சென்னை மாநகராட்சி மேயர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசி, ‘’இது சென்னையில் எடுக்கப்பட்ட படம் அல்ல’’ என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, 2015ம் ஆண்டு முதலே சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை எடுத்து, தற்போதைய சென்னை மழை வெள்ளத்துடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்பியுள்ளனர், என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:சென்னை கடற்கரை ரயில் மார்க்கத்தில் படகு சேவை தொடங்கப்பட்டதா?
Written By: Fact Crescendo TeamResult: False
