
‘’ஆட்டோ சங்கருக்கு வீரவணக்கம் செலுத்திய நாம் தமிழர் கட்சி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் போஸ்டர் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என விளக்கம் கேட்டிருந்தார்.
இதன்பேரில் தகவல் தேடியபோது, பலரும் உண்மை என நம்பி ட்விட்டர், ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதைக் கண்டோம்.
Tweet Link 1 I Tweet Link 2 I Archived Link
உண்மை அறிவோம்:
நாம் தமிழர் கட்சி, சமீபத்தில் வீரப்பனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவுக் கொடி கம்பத்தை சென்னையில் அமைத்தது. இதனை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில், அக்கட்சியை கேலி செய்யும் நோக்கில் மேற்கண்ட போஸ்டரை போலியாக தயாரித்து, சிலர் பகிர்ந்து வருகின்றனர்.
ஆம், உண்மையில் இந்த போஸ்டரை நாம் தமிழர் கட்சி வெளியிடவில்லை. இதுபற்றி நாம் தமிழர் கட்சியின் செயற்களம் அமைப்பின் தலைமைப் பொறுப்பாளர் மற்றும் மாநில ஐ.டி.விங் செயலாளர் ஜெகன்னாதன் அவர்களிடம் விளக்கம் கேட்டோம். ‘’இதனை நாங்கள் வெளியிடவில்லை. எங்களை கேலி செய்யும் நோக்கில் சிலர் இதனை தயாரித்து பகிர, மற்றவர்கள் உண்மை என்றே நினைக்க தொடங்கிவிட்டனர்,’’ என்றார்.
எனவே, இந்த போஸ்டர் நாம் தமிழர் கட்சி பெயரில் பகிரப்படும் போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:ஆட்டோ சங்கருக்கு வீரவணக்கம்?- நாம் தமிழர் கட்சி பெயரில் பரவும் வதந்தி…
Fact Check By: Pankaj IyerResult: False
