‘’அம்பத்தூரை விட அயோத்தியில் அதிக வளர்ச்சி’’ என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ அம்பத்தூரை விட அயோத்தியில் அதிக வளர்ச்சி. சென்னை அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டையை விட அயோத்தியில் அதிக பணம் புழங்குகிறது. திராவிட மாடலின் அம்பத்தூர்களை விட ராமர் மாடல் அயோத்திகள் அதிக வளர்ச்சியை எட்டும். ஆனால் அந்த வளர்ச்சியை அடைய மோடிஜி மீண்டும் பிரதமர் ஆகவேண்டும் – சிதம்பரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பரப்புரை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வகையில், புதிய தலைமுறை ஏதேனும் நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளதா, என்று தகவல் தேடினோம். ஆனால், அவ்வாறு எந்த செய்தியும் காணக் கிடைக்கவில்லை.

தொடர்ந்து, நாம் அவர்களது டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் கேட்டபோது, ,’’இது எங்களது பெயரில் பரவும் போலியான நியூஸ் கார்டு,’’ என்று கூறி உண்மையான செய்தியின் லிங்கை கொடுத்தார்.

எனவே, மேற்கண்ட நியூஸ் கார்டை எடிட் செய்து, வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘அம்பத்தூரை விட அயோத்தியில் அதிக வளர்ச்சி’ என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

Written By: Fact Crescendo Team

Result: Altered