நெற்றியில் காயம் ஏற்பட்ட இடத்துக்குப் பதிலாக வேறு ஒரு இடத்தில் மம்தா பானர்ஜி பேண்டேஜ் ஒட்டிய மம்தா பானர்ஜி என்று இரண்டு புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நெற்றியில் ஏற்பட்ட காயத்துடன் மம்தா பானர்ஜி இருக்கும் புகைப்படம் மற்றும் நெற்றியின் இடது ஓரத்தில் பேண்டேஜ் ஒட்டிய மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை ஒன்று சேர்த்து புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், "இதெல்லாம் புதிய மன்னர்கள் படத்துலயே வந்தருச்சு இப்ப அதே டிராமா போட்டுகிட்டு இருக்கு மம்தா பானர்ஜி காயம் ஆனது நடு நெத்தி பிளாஸ்திரி ஓரத்துல ஒட்டிருக்கு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive

இதே புகைப்படத்தை பலரும் ஃபேஸ்புக், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கடந்த வாரம் மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்குக் நெற்றியில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஆனால், மம்தா காயம் ஏற்பட்டதாக நடிக்கிறார் என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நெற்றியின் மையத்தில் ஏற்பட்ட காயத்துக்கு, நெற்றியின் இடது பக்கத்தில் பேண்டேஜ் ஒட்டியுள்ளதன் மூலம் மம்தா பானர்ஜி நடிக்கிறார் என்பது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இரண்டும் வெவ்வேறு காலக்கட்டத்தில் எடுக்கப்பட்டது போல உள்ளதால் இது பற்றி ஆய்வு செய்தோம்.

நெற்றியில் பேண்டேஜ் ஒட்டிய படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2024 ஜனவரி மாதம் 24ம் தேதி காரில் கொல்கத்தா வந்துகொண்டிருந்த மம்தா பானர்ஜி கார் விபத்தில் சிக்கியது என்றும் அதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது என்றும் குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை செய்தி ஊடகங்கள் பயன்படுத்தி இருப்பதைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: indianexpress.com I Archive

2024 ஜனவரியில் ஏற்பட்ட காயத்தின் புகைப்படத்தை, 2024 மார்ச் மாதம் ஏற்பட்ட காயத்தின் புகைப்படம் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் மம்தா பானர்ஜி நெற்றிக் காயம் என்று நடிக்கிறார் என்று பரவும் பதிவுகள் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மம்தா பானர்ஜி நெற்றியில் பேண்டேஜ் போட்டிருந்த பழைய புகைப்படத்தை எடுத்து 2024 மார்ச் மாதம் ஏற்பட்ட காயத்துக்கு வேறு இடத்தில் பிளாஸ்டர் போட்டுள்ளார் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நெற்றி காயத்துக்கு வேறு இடத்தில் பேண்டேஜ் ஒட்டிய மம்தா என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False