
‘’பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவதை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர்த்தார்,’’ என்று கூறி நியூஸ்7 தமிழ் பெயரில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதை காண நேரிட்டது.

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
நியூஸ்7 தமிழ் ஊடகம் லோகோவுடன் பகிரப்படும் மேற்கண்ட நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதால், இதுபற்றி நாம், நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவிடம் விளக்கம் கேட்டோம். ‘’இந்த செய்தியை நாங்கள் வெளியிடவில்லை,’’ என்று கூறிய அவர், உண்மையான நியூஸ் கார்டை நமக்கு அனுப்பி வைத்தார்.
அதனை மேற்கண்ட போலி நியூஸ் கார்டுடன் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.

நியூஸ்7 தமிழ் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: Altered
