‘’தமிழ்நாட்டில் பாஜக நோட்டாவை விட அதிக ஓட்டுகள் வாங்கும்’’ என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

சாணக்யா லோகோவுடன் உள்ள இந்த நியூஸ்கார்டில், ‘’ பலரும் மதிப்பிடுகிறார்கள் மிகப்பெரிய சக்தியாக தமிழகத்தில் பாஜக வளர்கிறது என்று, இது பிஜேபி ஏற்படுத்தும் வெற்று பிம்பமே!! அதற்காக நாளையோ அடுத்த இரண்டு ஆண்டுகளிலோ அவர்கள் தேர்தலில் நோட்டாவை விட அதிக வாக்குகள் பெறுவார்கள் என்று அர்த்தம் இல்லை. ஆனால் அடுத்த 3 முதல் 5 அல்லது 10 ஆண்டுகளில், தமிழகத்தில் நோட்டாவை விட அதிக வாக்குகள் வாங்குவதற்கு பாஜக சாத்தியம் உள்ளது – பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கணிப்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட தகவல் பற்றி விவரம் தேடியபோது, சாணக்யா ஊடகம் தரப்பில் ‘’இது எங்களது பெயரில் பகிரப்படும் போலியான செய்தி,’’ என்று கூறப்பட்டது. மேலும், அவர்கள் வெளியிட்ட உண்மையான செய்தி லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

இதன்படி, ‘’ தமிழக பாஜக – பிரசாந்த் கிஷோர் கணிப்பு பலரும் மதிப்பிடுவதைவிட மிகப்பெரிய சக்தியாக தமிழகத்தில் பாஜக இருக்கும். அதற்காக நாளையோ அடுத்த இரண்டு ஆண்டுகளிலோ அவர்கள் தேர்தல்களை வெல்வார்கள் என்று அர்த்தம் இல்லை. ஆனால் அடுத்த 3 முதல் 5 அல்லது 10 ஆண்டுகளில், தமிழக மக்களிடம் அதிகம் செல்வாக்கைப் பெற்று அதிக வாக்கு வங்கியை கொண்ட கட்சியாக பாஜக மாறும். – பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கணிப்பு,’’ என்றுதான் சாணக்யா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை வேண்டுமென்றெ எடிட் செய்து, ‘பாஜக நோட்டாவை விட அதிக ஓட்டுகள் வாங்கும்’ என்று பிரசாந்த் கிஷோர் பேசியதாகக் குறிப்பிட்டு வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘தமிழ்நாட்டில் பாஜக நோட்டாவை விட அதிக ஓட்டுகள் வாங்கும்’ என்று பிரசாந்த் கிஷோர் கூறினாரா?

Written By: Fact Crescendo Team

Result: Altered